திங்கள், 28 ஜூலை, 2014

மறக்க முடியாத வாழ்க்கையது!

மறக்க முடியாத வாழ்க்கையது!
ஊர் வாழ்க்கையையும்
புலத்து வாழ்க்கையையும்
ஒப்பிட முடியவில்லை.
மேல் நாட்டில் வாழ்ந்தாலும்-எம்
ஊர் வாழ்க்கையே-இன்னும்
மேல் வாழ்க்கையாய் தெரிகிறது!
அன்பு,அரவணைப்பு,அறம்,
ஆறுதல் என எம் ஊரின் மடி
எம்மை தாங்கிக்கொண்டது.
புலம்பெயர் தேசத்தில் வசதிகள்
இருந்தாலும்,புரியாத மொழியும்,
தெரியாத மனிதரும்,சுவையில்லா
உணவும்,அன்பில்லா மனமும்
நிம்மதியில்லா வாழ்வும் என்றானது.
புழுதி மண் நிறைந்த எம்மூரின் இன்பம்
பளிங்கு பதித்த புலத்தில் இல்லையே!
கல்லுக்கும்,முள்ளுக்கும்
அஞ்சாத கால்கள்-இன்று செருப்பின்றி
நடக்க முடியாமல் போனதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக