செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

உன் தாயை உனக்கு ஞாபகம் இருக்கிறதா?

உன் மனைவி,உன் பிள்ளை என
வாழும் மானிடனே!
தன் கணவன்,தன் பிள்ளை என
வாழ்ந்த உன் தாயை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
தன் பசி மறந்து,உன் பசி போக்க
உணவு தேடி வந்து உனக்கு
ஊட்டி விட்டு,பட்டினி கிடந்து
உனை வளர்த்த உன் தாயை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
வழிப் பிச்சைக்காரனுக்கு
சில்லறை போட்டதுபோல்
உன் தாய்க்கும் செய்துவிட்டு
ஆடம்பர வாழ்க்கையிலே
திளைத்திருக்கும் மானிடனே!
உன் தாயை உனக்கு
ஞாபகம் இருக்கிறதா?
உனக்கு சிறு தலை வலி என்றால்
தன் மடியில் உன் தலை சாய்த்து
தைலத்தால் உன் நெற்றி வருடி
சுகம் கொடுத்த உன் தாயை
மானிடனே உனக்கு ஞாபகம்
இருக்கிறதா?
பொய்யான உலகினிலே
மெய்யான தெய்வங்கள் பெற்றோரே!
அட..மானிடனே இன்னுமா
உனக்கு ஞாபகம் வரவில்லை
உன் தாயை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக