ஞாயிறு, 19 ஜூலை, 2015

பாசமும் நேசமும்!

ஊரே உலகம் என சுற்றி சுற்றி வந்தபோது
கிடைத்த இன்பம் இப்போ உலகை
சுற்றி வரும்போது கிடைக்கவில்லை!
எது எனக்கு பிடித்ததோ அது என்னுடன்
இருக்கும்போதுதான் சந்தோசம் கிடைக்கிறது!
விருப்பம் என்பதற்கும் நேசம் என்பதற்கும்
பிரிவு என்பதுதான் வித்தியாசத்தை
புகட்டுகிறது!விருப்பப்பட்டதை
அடைந்த சில நாட்களிலேயே
அந்த விருப்பம் தீர்ந்து விடும்!-ஆனால்
நாம் எதை நேசித்தோமோ அதனுடனேயே
காலம் முழுதும் வாழத் தோன்றும்!
என் நேசத்திற்கு உரியதுதான் என் ஊர்!
என்னை என் ஊருக்கு கொண்டுவந்த
என் பெற்றோர் எனக்கு கடவுளரே!
காதலியை திருமணம் வரைதான்
வர்ணிக்க முடிகிறது,பிறந்த ஊரை
வாழும்வரை வர்ணிக்க முடிகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக