வியாழன், 4 பிப்ரவரி, 2016

சுதந்திர தினம்!(04.02.1948)

பிரித்தானியர்கள் சிங்கள இனவாதிகளிடம்
இலங்கைத் திருநாட்டை ஒப்படைத்த நாள்
பெப்ரவரி நான்கு!
இதுதான் சிங்களதேசம் கொண்டாடும்
சுதந்திரநாள்.
இந்த தினத்தில்தான் தொடங்கியது
தமிழர்களின் கரிநாள்.
சிங்களமே நீ தமிழர்களை
எது வேண்டுமானாலும் செய்
என பிரித்தானிய ஏகாதிபத்தியம்
சிங்கள சர்வாதிகாரத்திடம்
இலங்கைத் திருநாட்டை விட்டுச்
சென்ற நாள் சிங்களத்தின்
சுதந்திர நாள்.தமிழர்களின் கரி நாள்.
கொள்ளை,கொலை,பாலியல் வல்லுறவு,
நில அபகரிப்பு,திட்டமிட்ட சிங்களக்
குடியேற்றம் என சிங்கள தேசம்
தமிழர்களின் மேல் வன்முறையை
கட்டவிழ்த்து விட அஷ்திவாரமிட்ட நாள்
இந்த பெப்ரவரி நான்கு
சிங்களத்தின் சுதந்திரநாள்
தமிழர்களின் கரிநாள்.
அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக,
கண்ணீரும் கம்பலையுமாக
சொல்லொணா துயரோடு
வாடி வதங்கிக் கொண்டிருக்கிறது
ஈழத்தமிழினம்.சிங்களத்தின் குதூகலத்தில்
தாமும் ஒட்டிக்கொண்டு
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டு
விட்டதென துள்ளிக்குதிக்கிறது
ஒரு சில ஈனத்தமிழினம்.
ஈனப்பிறவிகளால் இழந்தது ஏராளம்!
இன்னும் அழிகிறது ஈழம்
இந்த ஈனக்கூத்தாடிகளால்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக