வெள்ளி, 25 மார்ச், 2016

இனிமை தரும் கனவு!

காலம் பற்பல மாற்றங்களை
கொடுத்திருக்கிறது-ஆனாலும்
மனதில் உள்ள நினைவுகள்
மட்டும் காலத்தை வென்று
மாறாமல் இருக்கிறது!
நேசித்த அன்பும்,யாசித்த உறவும்
இன்றும் மனதில் இளமையோடு
துள்ளுகிறது!
விழியெனும் அம்புகள் எய்தபோதினில்
மனமது தடுக்கி விழுந்த
நினைவுகள்!
புன்னகை பூக்கள் மெல்லென தடவ
தேனருவியில் குளித்த
நினைவுகள்!
எல்லாமே இன்றும் நினைவாக நின்று
கனவாக வரும் பொழுதில்
சுகமாக தெரிகின்றது
ஒவ்வொரு நொடியும்!
நல்ல மனதுக்குத்தான் நேசிக்கத்
தெரியும்!
கறையில்லா உள்ளத்தால்தான்
யாசிக்க முடியும்!
சண்டைகள் தாலாட்டாகவும்,
கோபங்கள் செல்ல
விளையாட்டாகவும் இருப்பது
பாச நெஞ்சங்களுக்கு மட்டும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக