செவ்வாய், 21 ஜூன், 2016

பள்ளிக்கூட நினைவு!

பள்ளிக்கூட நினைவு-அது
கலைந்திடாத கனவு!
நாட்கள் ஓடிப்போகும்
காலம் மாறிப்போகும்-எனினும்
கல்விக்கழக வாழ்க்கை என்றும்
அழிந்திடாது வாழும்.
வகுப்பில் ஒற்றுமை காத்தோம்!
அன்புச் சண்டை போட்டோம்!
இனிப்பு வகைகள் வாங்கி
சேர்ந்து உண்டு மகிழ்ந்தோம்!
என்ன உலகம் என்று
இன்று சோர்ந்து போகும் போதும்
அந்த நாளின் நினைவு
மனதில் வந்து வந்து இனிக்கும்!
உரிமையோடு பேச பல
நல்ல உள்ளம் கொண்டோம்
ஆறுதலை பகிர பல
அன்பு உள்ளம் கண்டோம்.
ஏதேதோ மகிழ்ச்சி அது
இன்றும் மனதில் நெகிழ்ச்சி!
பிரிவு செய்த சூழ்ச்சி-ஆனால்
மறந்திடுமோ அந்தக் காட்சி!
அத்தனை நட்பு முகமும்
இன்று எந்தன் அகமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக