ஞாயிறு, 5 மார்ச், 2017

என்னோடு நீ இருந்தால்...!

என்னோடு நீ இருந்தால் உறவெல்லாம் இனிமையடி
பிரிவென்ற சொல் வந்தால் வாழ்வில்லை மரணமடி!
உறவில்லை என்றாலும் மனமெல்லாம் உன் நினைப்பு
நீ மறந்து நின்றாலும் கனவெல்லாம் உன் தவிப்பு!
கனவாக உன்னை நினைக்க என் மனதில் இடமில்லை
நீ இல்லை என்றாலோ என் வாழ்வும் நிலைப்பதில்லை!
காதல் என்ற சொல்லை நீ களங்கம் என்று மாற்றாதே
இதயத்தை எடுத்து விட்டு என்னை மறந்து செல்லாதே!
ஏதேதோ சொல்கிறாய் வார்த்தையாலே கொல்கிறாய்
என் மனதை புரிந்து கொண்டும் துன்பத்தில் தள்கிறாய்!
ஏன்தான்  வதைக்கிறாய் பாசத்தை வெறுக்கிறாய்
உயிரற்ற உடலாக எனைப்பார்க்க நினைக்கிறாய்?
உன்னை எண்ணி வாழுவதால் கேவலமாய் மிதிக்கிறாய்
பெண் என்றால் அன்பென்ற வசனத்தைக் கெடுக்கிறாய்!
என் மனதில் ஏன் புகுந்து வேதனையை கொடுக்கிறாய்?
காதலுக்காக கவிதை பிறந்தது எனக்காக நீ பிறந்தாய்
என நினைத்து நான் இருந்தேன்
எனைக்கொன்று நீ செல்ல நினைத்த கதையறிந்து
தவியாய் தவிக்கின்ற கதை நீ அறிவாயா?
வேதனையை சொல்ல வழியொன்றும் தெரியவில்லை!
உன் மனம் புரிந்துகொள்ளும் மொழி எனக்கு தெரியவில்லை!
நீ பேசுகின்ற வார்த்தையிலே தெளிவொன்றும் தெரியவில்லை!
விதியென்று சொல்வதற்கு மதி கெட்டுப் போகவில்லை!
மதி கெட்டுப் போவதற்கு சதியொன்றும் செய்யவில்லை!
எனை மறந்து செல்ல நினைக்கின்ற நீ கள்ளியடி!
அதற்கு முன் எடுத்து வை எனக்கு நீ கொள்ளியடி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக