ஞாயிறு, 19 ஜூலை, 2015

பாசமும் நேசமும்!

ஊரே உலகம் என சுற்றி சுற்றி வந்தபோது
கிடைத்த இன்பம் இப்போ உலகை
சுற்றி வரும்போது கிடைக்கவில்லை!
எது எனக்கு பிடித்ததோ அது என்னுடன்
இருக்கும்போதுதான் சந்தோசம் கிடைக்கிறது!
விருப்பம் என்பதற்கும் நேசம் என்பதற்கும்
பிரிவு என்பதுதான் வித்தியாசத்தை
புகட்டுகிறது!விருப்பப்பட்டதை
அடைந்த சில நாட்களிலேயே
அந்த விருப்பம் தீர்ந்து விடும்!-ஆனால்
நாம் எதை நேசித்தோமோ அதனுடனேயே
காலம் முழுதும் வாழத் தோன்றும்!
என் நேசத்திற்கு உரியதுதான் என் ஊர்!
என்னை என் ஊருக்கு கொண்டுவந்த
என் பெற்றோர் எனக்கு கடவுளரே!
காதலியை திருமணம் வரைதான்
வர்ணிக்க முடிகிறது,பிறந்த ஊரை
வாழும்வரை வர்ணிக்க முடிகிறது!

வெள்ளி, 12 ஜூன், 2015

மகாமாரித்தாயே!

அம்மா மகாமாரி!
ஒவ்வொரு ஆண்டும் நீ விழாக்கோலம்
பூணுகையில் எம் உள்ளத்து
கிடக்கையெல்லாம்
அலையாய் அடிக்குதம்மா!
இரவு பகலென்று இல்லாமல்-உன்
ஆலய வளாகமே எம்
வீடாய் இருந்ததம்மா!
உன் கோயில் மணியோசை கேட்டே
வளர்ந்தோம் நாம்!
தாகத்துக்கு தண்ணீரும்,
பசிக்கு உணவும் கொடுத்து வளர்த்த
எம் தாய் நீயம்மா!
நீயே எம்மை பத்திரமாய்
புலம்பெயர வைத்த தாயம்மா!
செருத்தனைப்பதி இருந்து
அரசாட்சி செய்பவளே!
உலகத்து மக்களுக்கு அருளாட்சி
புரிபவளே!
ஊர் வந்து உன்னை தரிசிக்க
முடியாத எங்களுக்கு
நாமிருக்கும் தேசமெல்லாம் வந்து
தரிசனம் கொடுக்கும்
அற்புதத்தாய் நீயே அம்மா!
எம் மக்கள் நிம்மதிக்கு நீயேதான்
என்றும் துணை அம்மா!