வியாழன், 31 ஜூலை, 2014

மறந்திடாத பிறந்த ஊர்!

மறந்திடாத பிறந்த ஊரும்,மனதில் நிலைத்த ஊராரும்
வாழ் காலமெல்லாம் நிறைந்திருக்கும்
இனிமை பொங்கும் கவிதைகளே!
பெற்றெடுத்த தாய்,தந்தை
அரவணைத்த ஊர்மக்கள் எல்லோரும் பெற்றோரே!
நடை பயில்ன்ற எம் வீதி
பயில்வித்த என் தந்தை எந்தனுக்கு கடவுள் என்பேன்!
தெற்கு வீதியில் இருந்து வடக்கு வீதி புளியங்கூடல்
சந்திவரை ஒரு நாளில் பலமுறை நம் கால் பதியும்.
தணிகாசலம் அண்ணா கடை தொடங்கி
சிதம்பரியப்பா மினி சினிமா வரை
ஊர் நண்பர்கள் எங்களது நட்பு விரியும்.
ஊர் பிரிந்து நாம் வந்து வருடங்கள் பலவாயிற்று
என்றாலும் ஊரவரின் பேச்சொலிகள் இன்றும்
ஒலிக்கிறது காதுகளில்!
எம் ஊர் இன்று பலபேரை இழந்து தவிக்கிறது!
அவர்களையும் மறப்பதற்கு முடியவில்லை.
வாழ்க்கையை வாழாது எத்தனையோ
இளம் உயிர்கள் பாதி வழி செல்லும் முன்னே
பிரிக்கப்பட்டதை எப்படி மறந்திடுவோம்?
காயங்கள் ஆறாது செய்வதறியாது 
மெளனித்து இருக்கும் எத்தனை
குடும்பங்கள் எம் ஊரில் எப்படி தேற்றிடுவோம்?
ஊரும் ஊரவர் நினைவும் என்றும் அழியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக