ஞாயிறு, 6 ஜூலை, 2014

என்றும் புதிய நினைவுகள்!

நிலாவே!
உன்னை காணும் போதெல்லாம்
பூமிப்பந்திலே,
எம் ஊரின் தெருக்களிலே
உலா வந்த நிலாதான்
நினைவில் நிற்கிறாள்!
காலங்கள் உருண்டோடியபோதும்
இளமைக்காலத்தின் நினைவுகள்
இன்றும் புதுமையாகவே தெரிகிறது.
அது ஒரு நிலாக்காலம்!
என் மனதில் ஒளி வீசிய
நிலாக்காலம்!
வீதியெங்கும் சுற்றித்திரிந்த
உலாக்காலம்!
கற்பனைகள் பல கொண்ட
கனாக்காலம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக