செவ்வாய், 8 ஜூலை, 2014

ஏனிந்த கல்மனம்!

பிரிவுகள் வந்தபோது கண்ணீர்
விட்டு அழுதோம்!
நெஞ்சு அடைக்கும்வரை
துயரத்தில் வீழ்ந்தோம்!
உறவுகள் எங்கள்
உயிரென தொழுதோம்!
எல்லாமே இன்று
என்னாகிப்போனது?
பாச நெஞ்சங்கள்
ஏன் கல்லாகிப்போனது?
வாழ்வென்பது நிரந்தரமற்றது
பாசம் கூடவா
அப்படியானது?
பணம் கொடுத்து
பாசம் வேண்டும் உறவுகள்
எதற்கு நமக்கு?
எல்லா மனமும்
காய்ந்து கிடக்கையில்
எம் மனதில் மட்டும் ஏன்
இன்னும் ஈரம்?
யாரிடம் சொல்லி
எம்மை தேற்றலாம்?
மனதின் வலியை
எப்படிப் போக்கலாம்?
ஏதோ கொஞ்சம்
எழுதிப் பார்க்கலாம்!
போலி மனங்களை
ஒதுக்கித் தள்ளலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக