செவ்வாய், 5 ஜனவரி, 2016

ஊரின் ஏக்கம்....!!!

வெளிநாடு கனவுலகமாகவும்
சொந்த ஊர் நிஜவுலகமாகவும்
எனக்குத் தெரிகிறது!
வெளிநாட்டில் ஆடம்பரமாக
வாழ முடிகிறது,வசதிகளோடு
வாழ முடிகிறது-ஆனால்
நிம்மதியை காண முடியவில்லை!
ஊரின் பழைய நினைவுகள் மட்டுமே
நிம்மதியான சிந்தனையை
கொடுக்கிறது!
உறங்கப்போனால் ஒரே
கனவாக வருகிறது எல்லாம்
ஊரின் காட்சிகளாகவே தெரிகிறது!
நட்பு,சுற்றம்,உறவு எல்லாம்
இன்று கனவில் மட்டும்தான்
காணமுடிகிறது!
எம் மனக்குமுறல்களை சொல்ல,
முகநூல்களும் வலைத்தளங்களுமே
எம் பக்கத்தில் நின்று எமக்கு
ஆறுதல் தருவன ஆகிவிட்டன!
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
அன்புக்காய் ஏங்கி ஏங்கியே கழிகிறது!
மனதின் வேதனையை
மனதைத் தவிர யார் அறிவார்.......???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக